Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கதிரவேலு சுப்பிரமணியம்
பதுளை முன்னாள் வர்த்தகர்
இறப்பு - 25 NOV 2010
அமரர் கதிரவேலு சுப்பிரமணியம் 2010 காரைநகர் வாரிவளவு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கோவளத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வெவர்செட் பிளேஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்” 

 அன்பின் பிறப்பிடமாய், பண்பின் சிகரமாய்,
பாசத்தின் உறைவிடமாய், அறிவில் ஆசானாய்,
வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்த
எங்கள் அப்பாவுக்கு!

மீண்டும் கிடைக்காத உறவே அப்பா - நீங்கள்
மறைந்தும், மறக்க முடியாத நிலையே எங்கள் அப்பா!

தீண்டும் பொருளெல்லாம் நீங்கள் தானே அப்பா - மறைந்து
ஆண்டுகள் பத்தான போதும் சிறகிழந்து தவிக்கின்றோமே அப்பா

பத்தென்ன பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும் - எம்மை
பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த - எமது
அன்புத் தெய்வமே அப்பா உங்கள் நினைவலைகள் என்றும்
எம் நெஞ்சினில் நீங்காமல் நிலைத்திருக்கும்.. 


தகவல்: குடும்பத்தினர்