யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg(Saar) ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிப்பிள்ளை மார்க்கண்டு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அந்த வானத்தின் நட்சத்திரமாக....அப்பா
நட்சத்திரங்கள் இன்று மெதுவாக சிரிக்கின்றன
ஏனெனில் நீங்கள் அவற்றில் ஒன்றில் வாழ்கிறீர்கள்
அதில் உங்கள் சிரிப்பு அழகாக புன்னகைக்கின்றது
அது விண்மீன்களையும் கடக்கின்றது
அது எங்கள் இதயத்திலும் ஒலிக்கின்றது
எங்கள் வாழ்க்கையை அழகாக மலர நீங்கள் உழைத்தீர்கள்
உங்கள் கனவுகளை ஒதுக்கி வைத்து
எங்கள் கனவுகளை நிறைவேற்றினீர்கள்
நீங்கள் சிந்திய வியர்வைத்துளிகள்
எங்களின் மகிழ்ச்சியின் முத்துகளாய் ஒளிர
எங்களை சிரிக்க வைத்து விட்டு, எங்கள் வாழ்க்கையின் ஒளியாக,
அந்த வானத்தின் நட்சத்திரமாக வாழும் அப்பா...
எங்கள் நினைவிலும் நிஜத்திலும் என்றென்றும் கலந்திருக்கும்
எங்கள் அப்பாவுக்கு நன்றி