Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 01 FEB 1958
விண்ணில் 26 MAY 2021
அமரர் கருணாகரன் தயாளசாமி 1958 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, பிரான்ஸ், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கருணாகரன் தயாளசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்-எங்கள்
விழிகள் முட்டி நிற்கிறது கண்ணீரால்
நீங்கள் உங்கள் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு

 உங்கள் நினைவுகள் இன்றும் எங்கள் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்து கொண்டோம்
உங்களால்-இன்று

 வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய் நீங்கள்
தோன்றுவதாய் எண்ணி...!!

 உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 43 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.