Clicky

மண்ணில் 22 APR 1940
விண்ணில் 06 JUN 2021
அமரர் கந்தையா மகாலிங்கம் 1940 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 08 JUN 2021 Canada

பதின்ம வயதினர் காலத்தில் இருந்து பெரும்துணிச்சல் பேர்வழியாகத் எமக்கு அடையாளம் காட்டியவரும், யாரும் எதிர்பார்க்காத முறையில் எந்தச்சூழ்நிலையிலும் விரைந்து புத்திசாலித்தனமாக பாரதூரமான விடயங்களையும் ஒரு வேடிக்கையாகக் கையாளும் திறன்படைத்தவருமான திருவாளர் கந்தையா மகாலிங்கம் அவர்கள், இன்று எம்மதியில் இருந்து விடைபெற்றுள்ளார்கள். அவருக்கு என் இறுதி அஞ்சலிகள் உரித்தாகுக! எம்வீட்டிலிருந்து ஆறு அல்லது ஏழு நிமிட நடை தூரத்தில் இருந்த அனுமந்தர் கோவிலுக்கு வடக்கே பெற்றோரோடு வாழ்ந்த அவரது இளமைக்கால செயற்பாடுகள் பல நினைவில் உள. பெரிய உயரமான நாவல் மரத்தில் துணிச்சலுடன் ஏறி பழம் பறித்தவேளை, கால்பதித்திருந்த கிளைமுறிந்துவிழ, கைபிடித்திருந்த கிளையில் தொங்கியவாறு இருந்தபோது வீட்டுக்காரரான சிற்பனைக் கோவில் முதலாளி திரு.வை.செ. அவர்கள் "நான் ஏந்துகிறேன் கையைவிடு" என அபயம் அளிக்க, அவ்வாறு செய்தபோது அபயம் அளித்தவர் முகம் காயப்பட்டு இரத்தம் வழிய, பயமடைந்த மகான் ஓடித்தலைமறையாகியதுபோன்ற திகிலூட்டும் சம்பவங்கள் பல. தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைககள் ஞாபகத்தில்கொள்ள, அமரர் பலவற்றை நிட்சயம் விட்டுச் செல்வார்கள். இரத்த உறவுகளின் துயர்துடைக்க ஆண்டன் அருள்வானாக! -கனடா, மார்க்கம் வாழ் வேலணை வாணர்