Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 22 APR 1940
விண்ணில் 06 JUN 2021
அமரர் கந்தையா மகாலிங்கம் 1940 - 2021 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், வவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எங்கள் அன்புத் தெய்வமே அப்பா
எம்மை விட்டு எங்கு சென்றீர்கள்
முப்பது நாள் கடந்தாலும்- அப்பா
முழுமனதாய் ஏற்க முடியவில்லை
ஏக்கத்துடன் எம்மைத் தவிக்கவிட்டு
ஏன் அப்பா சென்றீர்கள்

பக்குவமாய் பாசமாய் வளர்த்து விட்டு
பாரை விட்டே சென்றீர்கள் அப்பா
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போயிடினும்- அப்பா
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர்வாழும் விண்ணிலே தெய்வமாய் நின்று
எம்மை வழிநடத்துங்கள் அப்பா
உங்கள் அன்பு முகத்தை முந்நிறுத்தி
ஆண்டாண்டு காலம் வாழ்ந்திடுவோம்
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனுடனும் கலந்திட என்றென்றும்
பிராத்தனை செய்திடுவோம் அப்பா

எங்கள் குடும்பத்தலைவரின் மறைவுச் செய்தி அறிந்து ஓடோடி வந்து ஆறுதல் கூறி உதவிகள் பிரிந்த அனைவருக்கும் நன்றி மற்றும் தொலைபேசி இணையத்தளம் வாயிலாக அனுதாபங்கள் தெரிவித்த நல்லுள்ளங்களுக்கும் கண்ணீர் அஞ்சலி, பத்திரிகையில் செய்தி பிரசுரித்தவர்களுக்கும் பூக்கள், மாலைகள், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், வவுனியாவிலிருந்து புளியங்கூடல் வரை சென்று கடமைகள் புரிய உதவி நின்ற அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது அழைப்பை ஏற்று அன்னாரின் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய, ஆத்ம் சாந்திப் பிரார்த்தனைகளில் பங்குபற்றிய எல்லா நல்லிதயங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பில் அன்பு கலந்த நன்றிகளை நவில்கின்றோம்.

இங்ஙனம், அன்னாரின் குடும்பத்தினர்
Tribute 31 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.