3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!
அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்
பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்