2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர்
(துரை)
வயது 62
அமரர் கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர்
1958 -
2020
மருதங்கேணி தெற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மருதங்கேணி தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை திருஞானசம்பந்தர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர
நின்
பிரிவின் காலம்
ஆண்டு இரண்டு ஆனதே!
வலியின் வேதனையில்
குழவி போட்ட ஓட்டைபோல்
வானத்தைப் பார்த்து
வடிக்கின்றோம் கண்ணீர்
கால ஓட்டத்தின் கட்டாயம்
காலனவன் செய்திட்ட சதியால்
கண் முன்னே காணாமல் போனீர்களே!
எங்களுக்கு வாழ வழிகாட்டிய
எங்கள் அப்பா
எம் தேவைகள்
அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
உங்களை நினைத்து நினைத்து
இந்த உலகத்தில்
உயிராய்
உங்களை தேடுகின்றோம்
எம் இதயம் தொட்ட எங்கள்
அன்பு தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
அன்னாாின் ஆத்மா சாந்தியடையவும், எங்கள் குடும்பத்தினாின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தொிவிக்கின்றோம். (தணிகாசலம் குடும்பம்)