2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம்
1928 -
2017
மண்டைதீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை வினாயகரெட்ணம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பெற்றெடுத்து பிரியமாய் பெயர் சூட்டி
பெறும் பேற்றுக் கல்விதனை ஊட்டி
மின்னுகின்ற பொன் மணிகள் எம் உடம்பில் மாட்டி
எண்ணி மறைகின்ற மணித்துளிக்கும் விழிப் பூட்டி
கால மாற்றத்தில் கல்யாண கோலம் காட்டி
சாலச் சிறந்த தந்தையாய் வந்த மேதை
உன் வார்த்தை ஒவ்வொன்றும் எங்களுக்கு கீதை
ஆண்டு இரண்டில் ஆடித்தான் போனோம் ஆனாலும்
உங்கள் அறிவார்ந்த வார்த்தைகள்
எம்மை ஆற்றுப்படுத்தும் உங்கள்
பேச்சில் எங்கள் மூச்சு வாழும்
என்றும் உங்கள் நினைவுடன்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace.