Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 31 JUL 1955
உதிர்வு 04 DEC 2020
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி (சச்சி, அம்பிகா)
வயது 65
அமரர் கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி 1955 - 2020 சுன்னாகம் சூராவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் ஊராட்டி சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை மகேந்திரமூர்த்தி அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனி Bremen இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(முன்னாள் தலைமை பாதுகாவலர்- இலங்கை புகையிரத இலாக்கா), சவுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி(முன்னாள் தலைமை தபால் அதிபர்- இலங்கை தபால்சேவை இலாக்கா), யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அனாசுயன், அருனோதயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுவேதா அவர்களின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசன், மகேசன், கருனாகரன், சிவகுமார் மற்றும் பரமேசன், கலைமகள், பூவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லோகராணி, செல்வநாயகி, மதிவதனி, குமாரி, காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லோகேஸ்வரன், துஷாந்தா, தர்சாந்தா, தர்ஷிகா, லலித், லதா, துஷாரி, சுபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரதி, அரிகரன், கிருஷாந்த், ரசித் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அஷ்யா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2020 புதன்கிழமை அன்று நண்பகல் சமயமுறைப்படி நடைபெறும். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரமே நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்