ஜேர்மனி Regensburg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்களின் 90ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் அன்புச் செல்லக் குட்டியே
எங்களை விட்டுச் சென்றதேனோ
என்றென்றும் புன்முறுவலுடன்
எம்மோடு வாழ்ந்தாயே
உன் மறைவுச் செய்தி கேட்டு
உருக்குலைந்து போனோமே
உன் அன்பு அண்ணன் - உனைப் பார்த்து
உடைந்து போனானே
நீ எங்களோடு இருந்த காலங்கள்
எமது வாழ்வின் பொற்காலங்கள்
மாதம் மூன்று சென்று விட்டதே
மனம் ஆறாது தவிக்கிறோமே
உன் அழகான முகம், அன்பான மனம்
உன் குழந்தைக்குணம்
இதையெல்லாம் நினைத்துப் பார்க்க
ஒரு ஜென்மம் போதாது மகனே
உன் ஆன்மா இளைப்பாற
இறைவனை வேண்டுகின்றோம்
செல்வன் ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்களது மறைவுச் செய்தி கேட்டு, உடனே ஓடி வந்து ஆறுதல் கூறி பல உதவிகள் புரிந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், தொலைபேசி மற்றும் இணையத்தளம் ஊடாகவும், வேறு வழிகளிலும் அனுதாபம் செலுத்திய அன்பு உள்ளங்களுக்கும், மறைவுச் செய்தி கேட்ட நாளிலிருந்து, நல்லடக்கம் நடைபெறும் வரை பல வழிகளிலும் உதவிகள் புரிந்த இறுதிக் கிரியைகள் நடைபெறும் வரை பல வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மேலும் நல்லடக்கத்திற்கு வருகை தந்து அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றியடைப் பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பில் மனமார்ந்த அன்பு கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
செல்வன் ஜோசப் போல் கிறிஸ்டீயான் 90ஆம் நாள் நினைவு தினத்தை புனித மிக்கேல் தேவாலயத்தில் 06-08-2022 சனிக்கிழமை அன்று 10:30 மணியளவில் உறவினர்கள், நண்பர்கள் அனைவரோடும் இணந்து அன்னாரின் ஆன்மா இளைப்பாற்றிக்காகக் கூட்டுத்திருப்பலியில் பிரார்த்திக்கின்றோம்.
Rest In Peace