![](https://cdn.lankasririp.com/memorial/notice/210062/94456699-3a04-4b30-a51f-a664a0233056/23-652583c95f700.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/210062/c89755e0-b9c5-49e8-a883-2c9d24044208/23-652583c90a3c0-md.webp)
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-11-2022
ஓராண்டு கடந்தாலும்
உனது நினைவு
நாடி ஈர விழிகளுடன்
உன் வதனம்
தேடி தீராத வேதனையை
மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில்
நாமும் வாழ்கின்றோம்
உடன்பிறப்பே எங்கள் உயிர்ச் சகோதரனே!
எம்முடன் பிறந்தவனே எமது அருமைச் சகோதரனே!
உன்னைத் தேடி எங்கள் கண்கள் களைத்ததையா...
அமைதியின் அடைக்கலமாய்
அன்பின் பிறப்பிடமாய்... பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்... திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன எமது உடன்பிறப்பே
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கின்றோம்...
ஒங்கி வளர்ந்த ஆலமரமாய் உச்சத்தை தொட்ட ஜீவா ….,உன்உறவுகளுக்கெல்லாம் விழுதாக உனதன்பை பொழிந்தாய் ஜீவா … உன் பிரிவால் உன் உறவுகள்கண்ணீரில் கரைகின்றன…. உன்ஆத்மா அமைதியடைய ஆண்டவனை வணங்குகிறோம்.