

-
28 AUG 1989 - 28 MAY 2019 (29 வயது)
-
பிறந்த இடம் : Moenchengladbach, Germany
-
வாழ்ந்த இடம் : Bristol, United Kingdom
ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையவள் ஈன்ற ஒரே மகனாகினான்
சீலன் என்று அழைக்க பாச உருவாகினான்
அன்பென்ற கருவில் அஷ்வின் உருவாக்கினான்
அனைத்தையுமே இழந்து இன்று சுடராகினான்.
எத்தனை பல ஆண்டுகள் சிரித்திருக்கிறோம்
எல்லோரிலும் உனை நாங்கள் புகழ்ந்திருந்தோம்
பிரியாமல் எப்போதும் இணைத்திருக்கிறோம் - உன்னை
காணாமல் இன்று நாங்கள் கதறி அழுகிறோம்.
நீ பழகும் எல்லோருக்கும் உனைப்பிடித்தது
உன் அருமை தெரியாமல் நோய் பிடித்தது
காலனுக்கு கடைசியிலே உனைப்பிடித்தது - இன்று
பாதியிலே உன் வாழ்வை அது முடித்தது.
புன்னகையில் தவழ்ந்த எங்கள்
குடும்ப தீபமே - எம்மை
புலம்பியழ தவித்துவிட்டு
மறைந்ததேனடா
எமது உயிர்ச்செல்லம்
எம் பாசக்குஞ்சு எம்மைவிட்டு எங்கு சென்றாய்
தினமும் உன் முகம்- திணறுகிறது எம் மனம்
எம்முடனே இருப்பாய்- என்றும் சிறப்பாய்
சீலன் என்ற நாமம் சீருடனே வாழும்.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் !!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Moenchengladbach, Germany பிறந்த இடம்
-
Bristol, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
