
சுவிஸ் Solothurn ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணசேகரன் ஜெசீனா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் ஆருயிர் செல்லமே ஜெசீனா!
உன்னை காணாமல் ஒரு வருடமாக
தேடுகின்றேன்
நீ போன இடம்
தெரியாமல் தவிக்கின்றேன் ஜெசீனா!
உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய
காரணம்
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லைஇறைவனின் விதி விளையாட்டோ?
நான் அறியேன் ஜெசீனா! ஜெசீனா!ஜெசீனா!
உனையிழந்து மூன்று 365 நாட்கள்
ஆகிவிட்டது
உனை நினைக்காத நொடியில்லை
இங்கு, நாம் வார்த்தைகளிருந்தும்
மௌனிகளாக வாழ்கிறோம்
உன்னை நாங்கள் ஒரு முறை தான்
பிணமாக பார்த்தோம் ஆனால்
நாமிங்கு நித்தம் நடைப்பிணமாக வாழ்கிறோம்
மகளே மீண்டும் நீயிங்கு வரமாட்டாயா???
நாமிழந்த அத்தனையையும் மீட்டுத்தரமாட்டாயா???
இன்று வரை நாம் மூன்று வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை செல்லக் கிளியே!
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
அன்பு மகளே!!!!
உன் ஆத்மா சாந்தியடைய தினம் தினம்
இறை பாதத்தில் கண்ணீரால் அஞ்சலி செய்கின்றோம்...