Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 23 MAR 1959
ஆண்டவன் அடியில் 14 JUL 2022
அமரர் குணரத்தினம் கமலராணி 1959 - 2022 துணுக்காய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர், நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் கமலராணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 04-07-2023

கரம்பிடித்தவரோடு வாழ்வில்
பாதியாய் பக்கபலமாய் இருக்காது
பாதியிலே பரிதவிக்க விட்டு
மறைந்துபோன காரணம் தான் என்ன?
என் வாழ்நாள் முழுவதும் கூடவே இருப்பேன்
என்று கூறியது பொய்யாகிப் போனதே
தவிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்பு மனைவியே!

அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் மறைந்ததேனோ?

பாசமுள்ள நீங்கள் எங்களை பரிதவிக்க விட்டு
 பறந்து சென்றதும் ஏனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
 கண் காணாமல் மறைந்து விட்டாயோ?

ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!  

ஆண்டொன்று உதிர்ந்தாலும்
அம்மாவின் அன்பு முகம் அழியாமல்
 எங்கள் நெஞ்சினிலே இதழ் விரிகிறது...!!!

எம் அருகில் நீ இருந்த ஒவ்வொரு நொடிகளையும்
இன்னும் ஒரு தடவை
மனதார உணர வேண்டும் அம்மா
என்று உன்னை மறுபடியும் அழைக்க வேண்டும்

மறு ஜென்மம் என்றொன்று
மறக்காமல் மலரவேண்டும்
 ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
 உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?

நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்