Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மகிழ்வில் 27 SEP 1943
உணர்வில் 30 AUG 2021
அமரர் கோபால் மாசிலாமணி
ஓய்வுநிலை காவல்துறை இணை ஆய்வாளர்
வயது 77
அமரர் கோபால் மாசிலாமணி 1943 - 2021 வடமராட்சி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி நாவலடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபால் மாசிலாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது
 தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது
எம் இதயம் உங்கள் இனிய புன்னகை
மீண்டும் ஒருமுறை காண்போமா...

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும் எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
சூரியனே! நீ இன்றி எங்களுக்கு ஒளியே இல்லை...

இறைவனோடு நீங்கள்
கனத்த இதயத்தோடு நாங்கள்...
 உங்களை இழந்து வாழும் எங்கள் வலி
 காலத்தாலும் ஆற்ற முடியாதது...

உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
 பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 30 Aug, 2021