யாழ். சலையாவத்தை வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் paris, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானானந்தன் பாக்கியலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மசாந்தி பிரார்த்தனையும், மதியபோசன உணவு வழங்கும் நிகழ்வும் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடா கந்தசுவாமி ஆலய (Canada Kanthaswamy Temple- 733 Birchmount Rd, Scarborough, ON M1K 1R5) மண்டபத்தில் மு.ப 11:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை நடைபெறும் என்பதை அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் அறியத்தருவதோடு எங்கள் அன்னையின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.