5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
16
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 05-08-2025
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் தயாபரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டுகள் ஐந்து மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமய்யா?
நிழல் தந்து எமை வளர்த்து நிலைத்து
மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த உத்தமனே
எங்கள் அன்புத் தெய்வமே!
ஒரு மலராய் மலர்ந்து
பலர் வாழ மணம் வீசிய தந்தையே
என்றும் அழியாத உம் பாசம்
எம்மை விட்டு அகலாது அப்பா
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்