4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் தயாபரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
வருடங்கள் நான்கு கடந்ததுவோ
நம்பவே முடியவில்லையே
நேற்றுப்போல் இருக்குதைய்யா
உங்களிடம் நாம் கழித்திட்ட பொழுதுகள்
ஆணிவேராய் எம்மைக்
காத்து நின்ற எங்கள் தெய்வமே
விழுதுகள் நாம் விம்முகின்றோம்
ஆண்டு நான்காகியும் ஆறவில்லை எம்மனம்
விழிகளில் கண்ணீர் காயவில்லை
காலங்கள் கடந்தாலும் மாறாது
உங்கள் நினைவலைகள்
எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய் என்றும்
எம்முடன் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்