2ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy-sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஈஸ்வரன் இளங்கோ அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்னும் பறவை
சிறகடித்து வானில் பறந்தது!
விதி என்னும் அம்பினால்
அது அடிபட்டு மாய்ந்தது!
வாழ்ந்த கதை முடியமுன்
இறந்திடவா நீ பிறந்தாய்!
நீ ஆண்ட கதை அழிவதில்லை
நீ எங்கே சென்றாய் தனியே!
உன்னை பிரித்து விட்டு
எங்களை பிரிந்து விட்டு சென்றது ஏன்?
தனிமையிலே உன்னை இழந்து விட்டு
நாங்கள் அழுகின்றோம்....
உன் மலர்ந்த பூ முகமும்
கிழ்ச்சி பொங்கி நிற்கும்
உன் முத்தான புன்சிரிப்பையும் பார்ப்பது எங்கே?
உன் வரவை பார்த்து பார்த்து ஏங்குது எம்மனம்!
பாச நதியில் ஒர்வஞ்சம் அறியா ஈரநெஞ்சம்
படைத்தவனே மறுபிறப்பு என்று ஒன்று
உண்மையெனில் நீயே
எமக்கு உறவாக வேண்டும்
வையக வாழ்வு முடியும் வரையில்
உனது இனிய நினைப்போடே
எங்கள் காலம்...
தகவல்:
துவாரகன்