Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 01 NOV 1943
இறப்பு 17 OCT 2024
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம்
இலங்கை புகையிரத சேவை திணைக்கள தலைமைப் பணியாளர், ரொறன்ரோ போக்குவரத்து சபை சிரேஷ்ட சேவையாளர்(TTC), வேலணை மத்திய மகா வித்தியாலய மாணவர் மற்றும் சங்க முன்னாள் தலைவர், புங்குடுதீவு பழைய மாணவர் சங்க தலைவர், காப்பாளர், சிறந்த சமூகத் தொண்டர்
வயது 80
அமரர் ஆறுமுகம் அரியரெத்தினம் 1943 - 2024 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அரியரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கடவுள் அளித்த வரம்
கிடைக்கவில்லை எனக்கு
கடவுளே கிடைத்தார் வரமாக
அவர்தான் அன் அப்பா..
அப்பா என்ற
ஆலமர நிழலில்
இருந்தவரை
வாழ்க்கை என்னும்
வெயில் என்னை
சுட்டதில்லை..

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 38 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.