Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 29 MAR 1943
இறப்பு 01 MAY 2024
திரு யோகேஸ்வரன் பொன்னம்பலம் 1943 - 2024 புலோலி கிழக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கு பண்டாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், வல்வெட்டி ஒழுங்கைத்தோட்டம், அல்வாய் உண்டுவத்தை, கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இன்றோடு 31 நாட்கள்ஆனதுவே
நீங்கள் இல்லை 
 நினைக்கையில் வியக்கின்றேன்
 நிஜமாய் நான் வாழ்ந்தேனா?

 நினைவுகள் வருகையிலே
நிலைகுலைந்து போகின்றோம்
 காணும் காட்சிகளில்
 கண்முன்னே நிற்கின்றீர்!

 அன்பாய் அப்பா என்று
 அழைத்திட யாருண்டு?
வேதனையை சொல்லிவிட
வார்த்தைகள் இல்லை
 மீண்டும் நீ வாரும் அப்பா!

 வாழ்ந்திட இவ்வுலகில் நீ
வரும் காலம் வரும் என எண்ணி
 வாழ்கின்றோம்...!

 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 29.05.2024 புதன்கிழமை அன்று காலை 5.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 31.05.2024 வெள்ளிக்கிழமை மு.ப.11.00 மணியளவில் அன்னாரின் மகனின் அல்வாய் இல்லத்தில் நடைபெறவுள்ள சபிண்டீகரண, ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
உண்டுவத்தை,
அல்வாய் தெற்கு.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.