யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கை வாழ்விடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா வேல்ஸ்(Wales), கார்டிஃவ் (Cardiff) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகராணி சண்முகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னையைப் போல எல்லோருக்கும் அன்பு பாராட்டிய அன்புத் தெய்வம் உங்கள் ஆத்மா பிறப்பற்ற பெருவாழ்வை எய்தி இறையடியில் அமைதியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.