Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை
(ஸ்ரான்லி- இளைப்பாறிய நீதிமன்ற அலுவலகர் முதலியார்)
கர்த்தருக்குள் - 02 SEP 2018
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை 2018 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
 என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்"- (லூக்கா 23:43) 

எங்கள் அன்பின் தந்தையே
உங்களைப் பிரிந்து
ஐந்து ஆண்டுகள் சென்றதேனோ
எத்தனை காலங்கள் போனாலும்
ஆறவில்லை எம் துயரம்!

அன்பிற்கும் பாசத்திற்கும் பண்பிற்கும்
உறைவிடமாய் விளங்கிய எங்கள் அப்பாவே
ஆயிரம் தான் உறவுகள் இருந்தென்ன
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!

உங்கள் உறவுக்கு நிகர் எமக்கு
இப்பாரினில் யார் தான்
நித்தமும் உங்களை நினைத்து
நீங்கள் காட்டிய நல்வழியில்
நீங்கா நினைவுகளுடன் வாழ்கிறோம்...

தகவல்: குடும்பத்தினர்