Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை
(ஸ்ரான்லி- இளைப்பாறிய நீதிமன்ற அலுவலகர் முதலியார்)
கர்த்தருக்குள் - 02 SEP 2018
அமரர் வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை 2018 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

எமக்கு உயிர் தந்த அப்பாவே
அன்பினில் எம்மை சீராட்டி
பண்பினில் நாம் சிறக்க நாளும்
வழிகாட்டிய எம் தந்தையே!

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்
 ஆண்டு நான்கு ஆனாலும்
 ஆசை அப்பாவே உம் நினைவுகள்
எம்மோடு நித்தமும் பாசமாய்
எம் இதயத்தில் வாசமாய்
ஆனவரே அப்பாவே!

ஆண்டு பல ஆனாலும்
ஆறாது எம் துயரம்
நீங்காத எம் மனதில்
உங்கள் நினைவு எம்மோடு
வாழ்ந்திருந்த காலமெல்லாம்
சிறிய பொற்காலம்! 

உங்களை நினைவு கூர்ந்து
இந்நாளில் துதிக்கின்றோம்
இருகரங்கள் கூப்பி
 உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!

தகவல்: குடும்பத்தினர்