3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலுப்பிள்ளை பாலச்சந்திரன்
1955 -
2020
பாவற்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா பாவற்குளம் 1ம் யுனிற்றைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி நமணங்குளம் 1ம் யுனிற்றை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர
நின் பிரிவின் காலம்
ஆண்டு மூன்று ஆனதே!
ஆறாத் துயரம் எம் தொண்டை அடைக்க
மீளாத்துயில் கொண்ட தந்தை
உம் முகம் காண முடியாமல்
நிழல் முகம் கண்டு நித்தம்
கண்ணீர் மல்கி வாடுகின்றோம்!
ஆறாத காயமாக நின் மாய மறைவு
எம் மனதை வதைக்க மீளாத்துயருடன்
உறவுகள் நாம் உமை எண்ணி ஏங்குகின்றோம்!
மீண்டும் மீண்டும் உம் பிரிவினை
சொல்லும்
பல நினைவுகள் எமை வாட்டிட
உமை அஞ்சலி செய்து ஆராதிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்