யாழ். கரவெட்டி மத்தி பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
காசைத் தூசாக மதித்தாய்
பாசத்தை நெஞ்சில் புதைத்து வைத்தாய்
தேசத்தை மாற்ற நீபதித்த சுவடுகள்
தெருஞ் சாலையில் அழியாத எல்லைக்கோடுகள்
இருட்டின் ஏகாந்தம் உன்னிதய சுரங்கம்
ஏட்டில் நீபடித்த பொறியியல் அரங்கத்தில்
காட்டுத் தீயானாய் காட்டாறாய் பாய்ந்தாய்
ஆடாத இயந்திரத்தை ஆடவும் வைத்தாய்
அண்ணா உன் நினைவுகள்
அழியாத என் கனவுகள்---வசந்தன்
எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட வீரகத்தி சேந்தன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
http://thinakkural.lk/article/...
https://www.colombotelegraph.com/index.php/the-times-of-senthan-little-known-liberator-silent-giant/ https://www.colombotelegraph.com/index.php/the-times-of-senthan-little-known-liberator-silent-gi...