Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 19 JUL 1971
விண்ணில் 05 SEP 2020
அமரர் வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா
வயது 49
அமரர் வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா 1971 - 2020 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சுன்னாகம் கடவைப்புலம் வீதியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Harrow வை  வசிப்பிடமாகவும் கொண்ட வன்னியசிங்கம் ராஜேஸ்கண்ணா அவர்கள் 05-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வன்னியசிங்கம் மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமலிங்கம் மற்றும்  கண்ணம்மா(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

சந்திரகலா(கவிதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாருக்சன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

முரளிதரன், சாமிலா, ஜனனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திரா, சிவந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சிகா அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

ஷியாம், மாதுரி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியிலிருந்து மு.ப 09:00 மணி வரை நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியிலிருந்து மு.ப 10:00 மணி வரை பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices