யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Isleworth ஐ வதிவிடமாகவும் கொண்ட வளர்மதி பரமநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் அன்பின் குஞ்சம்மா. எங்கள் எல்லோருக்கும் நிறைய பிடித்த அம்மம்மா. உங்கள் அன்பினாலும் அரவணைபினாலும் எமக்கு கிடைத்த ஒன்று கூடல்களும் உறவு பாசங்களும் நிறையவே. வயது வந்த பின்பும் எப்படி...