Clicky

நன்றி நவிலல்
மலர்வு 11 NOV 1969
உதிர்வு 19 NOV 2020
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி
வயது 51
அமரர் உதயகுமார் நித்தியகல்யாணி 1969 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் நித்தியகல்யாணி அவர்களின் நன்றி நவிலல்.

அம்மா என்று உன்னை அன்போடு அழைத்திருந்தோம்
ஆதரவாய் எங்களுடன் அகம் நிறைந்து வாழ்ந்திருந்தாய்
பொன்மகளே எல்லோரும் போற்றுகின்ற திருமகளே
கண்களுக்குள் நிறைந்து நின்று காட்சிகளாய் உலவுகின்றாய்
உன்னை மறந்து நாங்கள் ஒரு கணமும் வாழ்ந்ததில்லை
இறுதிவரை எங்களுக்கும் இன்னருள் புரிய வேண்டுமென்ற
உறுதியுடன் உன்னடிக்கு ஒளியேற்றி நிற்கின்றோம்
நித்தியகல்யாணி நீ இறையடியில் நீடூழி வாழ்தல் வேண்டும்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 24 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.