யாழ். வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வீதி வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருஞானச்செல்வம் பத்மாவதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்னைப் பெற்ற அன்னைக்கு நிகராக என்னைக் கல்வியறிவுள்ளவளாக, மேடைக்கூச்சமின்றி பேசும் திறமையுள்ளவளாக ஆளாக்கிய என் அன்புக்குரிய அம்மாவே! அம்மா நீங்கள் கைவீசி நடக்கும் கம்பீரநடை,கல்விக்கண் கண்ட நல்ல...