Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 16 FEB 1940
ஆண்டவன் அடியில் 04 FEB 2024
அமரர் தில்லையம்பலம் அன்னலெட்சுமி 1940 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:22/01/2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 19, சிவபுரம், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா.....

அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!   

நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது

நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது

நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது

ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது

உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது   

உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்..!

தகவல்: யோகன் - நகுலேஸ்வரி, சயோனா, ஆருஜன்-குடும்பத்தினர், விஜி-குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

விஜி - மகள்
யோகன் - மகன்

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 06 Feb, 2024