Clicky

நன்றி நவிலல்
அமரர் தில்லையம்பலம் அருளம்பலம்
பாலா கபே, அருள்மல்ரி சென்ரர் உரிமையாளர்
மறைவு - 20 SEP 2019
அமரர் தில்லையம்பலம் அருளம்பலம் 2019 காரைநகர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும்,  K.K.S. வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அருளம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

தங்களை இழந்து ஒரு மாதம்
தாண்டியதெப்படிப் புரியவில்லை
இங்கது நீங்கள் இன்று இல்லை என்று
எண்ணிட எம்மால் முடியவில்லை!

வார்த்தைகள் மெளனமாகி
இதயங்கள் காயமாகி
விழியோரம் ஈரமாகி செல்கிறது

நாட்கள் கடந்தாலும் ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது
தினம் தினம் எங்களின் கண்களில்.!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 19-10-2019 வெள்ளிக்கிழமை அன்று ஆலங்குன்றம் புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் எமது இல்லத்திலும் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.