7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவராசா அகத்தம்மா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் கடந்ததம்மா
மாண்டுபோன உங்கள் நினைவால்
மீண்டுவர முடியாமல் தவிக்கிறோம்.
காலம் கடந்து காலனவன்
எமை அழைக்கும்வரை
கண்ணீரோடு காத்திருப்போம்
உனைக் காணும் வரை
உன் நினைவு சுமந்த வலிகளைத் தாங்கி
வழிகளைத் தேடித் தொடரும் இந்த
சுகமான வாழ்க்கைப் பயணத்தில்
எமக்கு வழிகாட்டி
வல்லமை தாரும் எம் தாயே!
எம் உள்ளத்தில் கருணையுள்ள
கடவுளாய் வாழ்வீர்கள்.
தகவல்:
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்