Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 MAR 1944
இறப்பு 06 FEB 2020
அமரர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரி 1944 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி யாழ்பாடி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிப்பிள்ளை மகேஸ்வரி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
 நீங்கள் இல்லாத உலகம் என்றும்
 இருள்மயமானது எங்கே காண்போம்
 உங்கள் மலர்ந்த முகத்தை

 அன்பு நிறைந்தவளே அம்மாவே
 அருங்குணங்கள் பல கொண்டவளே!
 ஆண்டு மூன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
 ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
 எமக்கு அன்னையாய் பிறந்திடவே
 நாம் ஏங்குகிறோம் தாயே!

உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
 வார்த்தைகள் தேடியே தவிக்கின்றேன்
 அன்னையே இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில்
வாழ்வதற்கு என்ன பாவம் செய்தேனோ அன்னையே!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்