2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டி மொட்டைபுளியடியைப்பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை திருவேற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா ஆனந்தராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு கடந்தாலும் ஆறிடுமோ
உங்கள் நினைவலைகள் ஆனந்தி!
கண்ணின் மணிபோல் எம்மை
காத்த அன்புத்தெய்வமே ஆறிடுமோ
எங்கள் துயரம் நீங்கள் பிரிந்து
இரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும் நீங்காது
உங்கள் நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி - மிருனாளினி ஆனந்தராஜா மற்றும் குடும்பத்தினர்