Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 12 APR 1936
மறைவு 28 APR 2022
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1936 - 2022 நயினாதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பரந்தனை வசிப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பராசக்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி, நன்றி நவிலலும்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது! 

உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:45 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை நடைபெற இருப்பதால், தாங்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, தொடர்ந்து நடைபெறும் உணவுபசார நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி: 

Via Benvenuto Cellini, 7, 20024 Garbagnate Milanese M1

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாக்கியலக்சுமி - மகள்
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்