யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 19/02/2026
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆன போதும்
உன்னை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உங்கள் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
காலத்தின் கட்டளையோ- ஐயா
இன்று நீங்கள் கடவுளாகினாய்...
எத்தனை உறவுகள் எமக்கிருந்தாலும்
மாமா என்று சொல்ல ஏங்கித்
தவிக்கின்றோம் உங்களை நினைத்து
எங்கள் ஆயுள் உள்ளவரை உங்களை
எங்களால் மறக்கமுடியாது மாமா...
சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்திட நீங்கள் இல்லை
உங்களின் அன்பு மிகப் பெரியது
அதை யாராலும் ஈடு செய்ய முடியாது..
என்றும் உங்கள் நினைவுடன் உங்கள் பெறாமக்கள்...
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எம்மில் பாதியாகி பயணித்தவரே...
உம் நினைவுகளுடன் வாழ்கிறோம்.
வாழ்க்கை சில நேரங்களில்
புரியாத புதிர்...
நல்லவரை இறைவன் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்!
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்,"
அன்புடன் தம்பி சிவராஜா