எனக்கு ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் சுப்ரா(பொன்ட்) டியூசன் கிளாசில் சமூகக்கல்வி பயிற்றுவித்த ஆசான். எளிதாக அனைவருக்கும் விளங்கக் கூடிய வகையில் பயிற்றுவித்தவர். எண்பது, தொண்ணூறுகளில் ஜியோகிரஃபி சண் மாஸ்டரை தெரியாதோர் அந்நாளில் யாழில் இல்லை எனும் அளவில் பெரும் பெயர் பெற்றவர். அவர் எனக்குப் போதித்த சமூகக்கல்வியும்வரலாறும், புவியியலும் என் சிந்தையில் நிறைந்து நான் என் குழந்தைகளுக்கு வீட்டில் கற்பிக்கப் பெரிதும் உதவியது. நன்றி சண் மாஸ்டர் நீங்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்ததற்கு. நான் அவரிடம் பயின்ற சில வருடங்களின் பின் நான் தாய்மையடைந்த நிலையில் நானும் எனது தாயாரும் கோம்பையன் மணல் சந்தியில் பேருந்துக்காக் காத்திருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மாஸ்டர் எங்களைத் தாண்டிப் போகும் போது நான் புன்னகைத்தேன். மாஸ்டர் திரும்ப வந்து என் நலம் விசாரித்துச் சென்றார். தான் ஆசிரியர் நான் மாணவி என்ற பாகு பாடில்லாத பண்பாளர் எங்கள் சண் மாஸ்டர். அவர் என்னை நியாபகம் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியம். எங்கள் குருவின் இழப்பால் துயருரும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது ஆசானின் நல் ஆத்மா எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவின் பாத கமலங்களில் சரணடைந்து சாந்தி பெற கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து வேண்டிப் பிரார்த்திக்கின்றேன். " ஓம் சந்தி சாந்தி சாந்தி"
Dear Bubby Our deepest sympathies to you and your family. Our thoughts and prayers are with you.