Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 26 OCT 1937
இறப்பு 03 OCT 2022
அமரர் செளந்தரநாயகி சிவஞானம் (சிவயோகம்)
வயது 84
அமரர் செளந்தரநாயகி சிவஞானம் 1937 - 2022 வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரநாயகி சிவஞானம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 31-10-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் வேலணை சாட்டி புனித தீர்த்தக் கரையிலும் வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 02-11-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் கிளிநொச்சி பெரியகுளத்திலுள்ள அன்னாரது இல்லத்திலும் நடைபெற இருப்பதால், அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
பெரியகுளம்,
கிளிநொச்சி.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.