ஆழ்ந்த இரங்கல் ... மகிழ்ச்சியான உறவின் நெகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப்பார்க்கிறேன். முகம் கண்டாலே மகிழ்ச்சி மகிழ்ச்சியை கொண்டதே அந்த முகம். பேச்சில் தேன் இருக்கும், மனம் முழுக்க பால் இருக்கும். சேர்ந்து பாலம்பிட்டி போன ஞாபகம், புலம்வந்த பின்னால் சந்திக்கமுடியவில்லை . இன்று லங்காஸ்ரீயை திறந்தபோது பேரதிர்ச்சி. பள்ளமடுவில் அடிக்கடி கண்டமுகம், அதனால் கண்களில் குளம் . இழந்தவர்களுக்கு ஆறுதலில் காலதாமதம் ஆனாலும் எனக்குள் வந்துபோனது அந்த அழகான அழகியல். பழைய முகம் தான் மன பதிவில் பசுமையாக , கண்டுபிடிக்கமுடியாத மாற்றம் ஆனாலும் அந்த பெயர் அப்படியே என் நெஞ்சோடு .. ஆத்மா சாந்தியடையட்டும். மனித கருவில் உண்டாகும் அனைத்து உயிர்களுக்கும் மரணம் நிட்சயிக்கப்பட்ட மாற்றமுடியாத ஒன்று . அழகான நினைவுகளை என் மனதுக்குள்ளும் விட்டு சென்றமைக்கு நன்றி. எங்கள் குடும்பம் சார்ந்து ஆழ்ந்த துயரை பகிர்ந்துகொள்கிறோம். துயர்நிறைந்து துயர் பகிர்கிறோம். குடும்ப துயரில் உங்கள் கரத்தோடு எங்கள் கரம்பற்றி இணைகின்றோம். புனித ஆத்மா அமைதியாக இளைப்பாறட்டும்... இராசரெத்தினம் குடும்பம் பள்ளமடு ,விடத்தல்தீவு.
Rest in peace Theivendra Maama until we meet again.