யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், சரவணை, பிரித்தானியா லண்டன் Raynes Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் சிவஞானசேகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் இலண்டன் கிங்ஸ்டன் தேம்ஸ் நதி கரையில் சைவக்குருக்களால் கிரியை செய்யப்பட்டு பின்னர், அங்கு நதியில் அஸ்தி சேர்க்கப்படும். அதனைத்தொடர்ந்து 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் அவரது இல்லத்தில் வீட்டுக்கிரியைகள் நடைபெறும் என்பதனை உற்றார் உறவினருக்கு அறியத்தருகின்றோம்.