யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் paris ஐ வசிப்பிடமாகவும் கொணட சிவரத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்பினால் எமை அரவணைத்து
அறிவூட்டி வளர்த்து பண்புடன்
எங்களை வாழ வைத்த அன்புத் தெய்வமே!
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து நாட்கள்
31 ஆன போதும் உங்களை நாங்கள் இழந்த
துயரை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா...
நீங்கள் மண்ணைவிட்டு உங்கள்
பொன்னுடல் மறைந்தாலும்
மனதைவிட்டு ஆகலாத
மாண்புமிகு அன்னையே....
இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உங்களைத் தேட எங்கள் மனமோ
உங்கள் அன்புத்தாய் ஏங்கித் தவிக்கின்றதம்மா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
திருவெண் காட்டானை பிரார்த்திக்கின்றோம்....
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருந்து இருந்த வேளையில் நம் இல்லத்தில் நேரில் வந்தும் தொலைபேசியுடாகவும் முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கு, அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையங்கள் , மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 07-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
7, Avenue Therese
94430 Chennevieres surmarne