5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவராமலிங்கம் கனகமணி
வயது 82
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, லண்டன் Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராமலிங்கம் கனகமணி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள் அன்பு அன்னையே
எங்கள் அனைவரையும் விட்டுப்
பிரிந்தது தான் ஏனோ
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள் வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
நிழல் தந்து எமை வளர்த்து நிலைத்து
மண்ணில் வாழ வைத்து உறுதியுடன்
எம்மைக் காத்த உத்தமியே எங்கள்
அன்புத் தெய்வமே! அம்மா?
என்று குரல் எழப்புகிறோம் ஆனால்...
பதில் இல்லையே! நீங்கள்
பிரியில்லையம்மா... எங்களோடு
வாழ்ந்து கொண்டு இருக்கிறீங்கள் அம்மா…
உங்கள் ஆத்மா அமைதிபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்