யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கந்தசாமி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 30-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்று, வீட்டுக்கிரியை 01-09-2022 வியாழக்கிழமை அன்று அன்னாரின் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற உள்ளதால், அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றொம்.
முகவரி:
இல.47, காளி கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா.
sorry to hear babu anna and family please accept my deepest condolences and my prayers for his soul may rest in peace