4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி
ஓய்வு பெற்ற மின்சாரப் பொறியியலாளர்
வயது 89

அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி
1931 -
2020
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
73
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீங்கள் விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா!
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உங்கள் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உங்களுக்குக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உங்கள் உயிர்தனை
காலம் காலமாய் உங்கள் நினைவால்
காத்து நிற்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்