

யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!
எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!
காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்..
ஆகிவிட்டீர்கள் அம்மா....!!!
31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!
தரணியில் உம்மை எப்போ காண்போம் அம்மா!
உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இப்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையிலும் எங்களுடைய ஆளாத்துயரிலும், துக்கத்திலும் கலந்துகொண்டு சகல உதவிகளையும் புரிந்த அனைத்து சொந்தங்களிற்கும், நண்பர்களுக்கும் எங்கள் கடைமையை தங்கள் கடைமையாக ஏற்று இறுதிவரை பணிபுரிந்தவர்களுக்கும், ஓடிவந்து உதவிகள் பல புரிந்த அயலவர்களுக்கும்,தொலைபேசி, இணையத்தளங்கள் மூலமாக துயரில் பங்கெடுத்தோருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு 04-05-2020 திங்கட்கிழமை நடைபெறும் அந்தியேட்டி கிரிகையிலும் நிகழ்விலும் கலந்து கொண்டு அமரர் சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.