Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 29 AUG 1947
விண்ணில் 18 APR 2019
அமரர் பொன்னையா சிவபாலன் 1947 - 2019 அனலை தீவு ஐயனார் கோவிலடி, Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அனலைதீவு ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா சிவபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு மூன்று போனாலும்
அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது
உங்கள் நினைவு ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்
துயில் கொண்டதேனோ

எங்கள் வீட்டு நிலவாக
 ஒளி வீசி மகிழ வைத்தீரே யார்
கண்பட்டு மறைந்து போனீரோ
தாமரை மலர் நீரில் ஆடுவதுப்போல
நாங்கள் உமைப்பிரிந்து
 தத்தளித்து மனம் ஆடுகின்றதே

நீங்கள் வாழ்ந்த இவ்வுலகில்
 எமை வாழவைக்க ஓயாதுழைத்து
இப்போ ஓய்வெடுத்துக் கொண்டீர்களே

நீங்கள் விட்டுப் போன வெற்றிடத்தில்
 எதை இட்டு நிரப்புவோம் ஐயா
 கல்லைறைப் பூக்களோடு எங்கள்
 கண்ணீரும் பூத்துக்கிடக்கிறது

ஐயா உங்கள் ஆத்மா சாந்தி
 அடைய தினமும்
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

என்றென்றும் உங்கள் நினைவில்
மனைவி, மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள்,
மற்றும் உற்றார், உறவினர்கள். 

தகவல்: குடும்பத்தினர்