யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் வவுனியா ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், ஜேர்மனி Borken ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவம் சிவகிருஷ்ணநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிரியைகள் 25-08-2025 திங்கட்க்கிழமை அன்று இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து, 30-08-2025 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் மதியபோசன நிகழ்வு எங்களது இல்லத்தில் நடைபெறவுள்ளது. எங்கள் தந்தையாரை நினைவுகூறும் இந்நாளில் கலந்துகொள்ளும் வண்ணம் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
முகவரி:
Neue Kämpe 34,
46325 Borken,
Germany.