கிளிநொச்சி பொன்னாவெளி பூநகரியைப் பிறப்பிடமாகவும், உதயநகர் மேற்கு கிளிநொச்சியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் பத்மசிறி அவர்கள் 16-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுமாரன், குணபூசணி தம்பதிகளின் அன்பு மகனும், காசிலிங்கம், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிரிஜா(ஆசிரியை, கிளி/அன்னை சாரதாதேவி வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
லதுசன்(ஐக்கிய அமெரிக்கா), இந்துஷா(மாணவி, கால்நடை வைத்திய விலங்கு விஞ்ஞான பீடம் பேராதனை பல்கலைக்கழகம்), கீர்த்திகன்(பொறியியலாளர்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லக்சனா(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
யோகேஸ்வரன், ரவிச்சந்திரன்(கிளி/ ஜெயபுரம் மகா வித்தியாலயம்), திருக்கேதீஸ்வரன்(கிராம அலுவலர்), சிறிரஞ்சன்(தவிசாளர், பூநகரி பிரதேச சபை), காண்டீபன்(பிரான்ஸ்), வாணிசிறி(ஆசிரியை, கிளி/பாரதி வித்தியாலயம்), சிறிதேவி(பிரான்ஸ்), தேவிகா(பல் வைத்தியர், கொழும்பு தேசிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு சகோதரரும்,
யுவநேசன், விஜிதா, லிங்கேஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-12-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் இல. 63A, உதயநகர் மேற்கு, கிளிநொச்சி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:
வீடு: +94776983583