திதி: 03-09-2026
யாழ். புலோலி மேற்கு தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து வாணர் சிவகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஐந்து வருடம் முடிந்தாலும்
உங்கள் நினைவுகள் எம்மை
விட்டு விலகாது அப்பா!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம்
நீங்கள் தானே உங்களுக்கு நிகர்
வேறு யாரப்பா?
அன்பு ஒன்றை வாடகையாய்
கொடுத்து எம் நெஞ்சினில்
வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவு என் நெஞ்சை
விட்டு பிரியாது அப்பா
இன்று பிரிவு என்னும் துயரால்
ஐந்து ஆண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும் சீதாதேவி(மனைவி),
யாமினி, சுரேஷ்குமார்(பிள்ளைகள்),
இரவீந்திரன், Janie(மருமக்கள்),
பிரகதீஷ், யாஷவி(பேரப்பிள்ளைகள்).
We are deeply sorrowed by the passing of your Father. I know how much you loved him. He will be sadly missed by everyone who knew him. May his soul rest in peace.